அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண குடியிருப்புப் பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் 5 பேர் பலியாகினர், குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர்.
ஹோஸ்டன் நகரில் உள்ள குடியிருப்புப் பகுதிக்குள் திடீரென புகுந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த மக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 5 பேர் பலியாகினர். 2 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அருகில் உள்ள இடத்தில் பதுங்கியிருக்கலாம் என்ற அடிப்படையில் அமெரிக்க காவல்துறையினர் அவர்களைத் தேடி வருகின்றனர்.