Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரானை தனிமைப்படுத்த சவுதியுடன் கூட்டு: சாமர்த்தியமாய் காய் நகர்த்தும் டிரம்ப்!

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (15:43 IST)
ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகிய டிரம்ப் அதில் இருந்து ஈரான் மீது பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ஈரானை தனிமைப்படுத்தும் நோக்கத்தில் டிரம்ப்பின் செயல்கள் உள்ளன. 
 
ஈரான் ஒரு நாளைக்கு 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கிறது. இரான், சவுதியை அடுத்து ஈரான் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 
 
ஆனால், கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் இருந்து ஈரானை அகற்ற அமெரிக்கா துடித்து வருகிறது. அதன் முதல் நடவடிக்கையாக சவுதி அரேபியா மூலம் காய் நகர்த்தி வருகிறது. 
 
ஆம, கூடுதலாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்து சப்ளை செய்யுமாறு சவுதி அரேபியாவிடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் கேட்டு கொண்டுள்ளார். இதன் மூலம், சவுதியிடம் இருந்து மற்ற நாடுகள் கச்சா எண்ணெய்யை வாங்கும் பட்சத்தில் ஈரானின் தேவை குறையும் என டிரம்ப் கணக்கிட்டுள்ளார். 
 
அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பதால், சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ், தேவைப்பட்டால் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தயாராக இருப்பதாக உறுதி அளித்துள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments