Webdunia - Bharat's app for daily news and videos

Install App

200க்கும் மேற்பட்ட ஏலியன்கள் பூமிக்கு வந்து செல்கின்றன : ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 2 மே 2016 (16:35 IST)
எராளமான வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்கின்றன என்று ஆராய்ச்சியாளர் நான்சி மலகரியா பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளார்.


 

 
நான்சி மலகரியா வேற்று கிரகவாசிகள் பற்றி ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ள அவர், தன்னுடைய  கணவருடன் சேர்ந்து ஏலியன் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார்.  
 
அவர் சமீபத்தில் ஒரு ஆங்கில செய்தி இணையதளத்திற்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
 
நமது பிரபஞ்சத்தில் 200க்கும் மேற்பட்ட வேற்றுகிரக வாசிகள் வந்து செல்கின்றன. நமது பூமிக்கு வர 2 வாரங்களை அவை எடுத்துக் கொள்கின்றன. அவைகளால் இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. அவைகள் தங்கள் பரிமாணத்தையும், உருவத்தையும் மறைத்து கொண்டு வருகிறார்கள்.
 
அமெரிக்க அரசு அவர்களை வேட்டையாட துடிக்கிறது. மேலும், வேற்றுகிரக வாசிகளுக்காக வேலை செய்பவர்களையும் அவர்கள் வேட்டையாடுகிறார்கள். நமது பூமி அவைகளின் தொழில் மண்டலமாக மாறியுள்ளது. உலகத்தின் நன்மை கருதி அவர்களோடு இணைந்து வேலை செய்வதற்கு நானும், எனது கணவரும் ஆர்வமாக இருக்கிறோம்.


 

 
அவைகளும் மனிதர்களோடு இணைந்து பணிபுரிய ஆர்வமாக இருக்கிறார்கள். மேலும், வேற்றுகிரக வாசிகளிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார்.
 
ஆனால், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து செல்வதாய் கூறப்படுவது உண்மையில்லை என்று அமெரிக்கா மறுத்துள்ளது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments