Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அல்ஜீரியாவில் பயங்கர காட்டுத்தீ; 26 பேர் உடல் கருகி பலியான சோகம்!

Webdunia
வெள்ளி, 19 ஆகஸ்ட் 2022 (09:10 IST)
அல்ஜீரியா நாட்டில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் பல குடியிருப்புகள் எரிந்து நாசமானதுடன் பல மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அல்ஜீரியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீ பல்வேறு மோசமான விளைவுகளையும், உயிர்பலியையும் ஏற்படுத்துகிறது. தற்போது கடந்த சில நாட்களாக அல்ஜீரியாவில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

அல்ஜீரியாவின் வட பகுதியை சேர்ந்த 8 மாகாணங்கள் காட்டுத்தீயில் சிக்கியுள்ளன. இதில் துனிசியா மாகாண எல்லை நகரமான எல் டார்ப் காட்டுத்தீயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நகரை சேர்ந்த 24 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகியுள்ளனர். செட்டிப் நகரிலும் தாய், மகள் தீயில் கருகி பலியாகியுள்ளனர்.

இதுவரை காட்டுத்தீயால் 37 பேர் பலியாகியுள்ளனர். காட்டுத்தீயில் பலியானோர் குடும்பங்களுக்கு அந்நாட்டு அதிபர் அப்தெல் மஜித் இரங்கல் தெரிவித்துள்ளார். காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு படைகள், ராணுவ ஹெலிகாப்டர்கள் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீயில் 90 பேர் பலியானது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments