Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்

நேபாளத்தில் இன்று மீண்டும் நிலநடுக்கம்
, ஞாயிறு, 26 ஏப்ரல் 2015 (10:31 IST)
நேபாளத்தில் இன்று காலை 4.5 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 



 

 
நேபாளத்தில் நேற்று 25 க்கும் மேற்பட்ட முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஏராளமானோர் உயிரிழந்தனர். இதனால் அங்கு மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
 
இந்நிலையில், இன்று காலை அங்கு மீண்டும் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவானது.
 
இந்த நிலநடுக்கம் அதிகாலை 5.11 மணிக்கு ஏற்பட்டடதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால்  பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
நேபாளத்தில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil