ஆப்கானிஸ்தானில் வாலிபால் விளையாட்டுப் போட்டி நடந்த இடத்தில், நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் பலியாகியுள்ளனர் மேலும் 60 பேர் காயம் அடைந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லை பகுதியையட்டி அமைந்துள்ள பக்திகா மாகாணத்தில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியைக் காண்பதற்காக ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தற்கொலை படை தீவிரவாதி ஒருவர் தனது உடம்பில் கட்டி இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 60 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.