Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கருணை கொலைக்கு மிரட்டல்

10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கருணை கொலைக்கு மிரட்டல்
, திங்கள், 21 ஜூலை 2014 (15:34 IST)
ஆப்கானிஸ்தானில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியை கருணை கொலை செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் குண்டுஸ் மாகாணத்தில் உள்ள அல்டிகும்பாட் என்ற கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சமீபத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த 45 வயது தலைவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் அச்சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் பெண்கள் பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை கருணை கொலை செய்யும்படி சிறுமியின் தந்தையை கிராம மக்கள் மிரட்டுவதாகக் கூறப்படுகிறது. அந்த சிறுமியால் அந்தக் கிராமத்துக்கு அவமானம் நேர்ந்து விட்டதாகக் கருதுவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கிராம தலைவர் தெரிவித்தார். ஆனால் அதற்கு சிறுமியுன் பெற்றோர்கள் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil