Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாயின் பிணத்துடன் வசித்த நபர்: பென்சன் பணத்திற்காக செய்த கொடூரம்

Webdunia
வெள்ளி, 14 டிசம்பர் 2018 (14:01 IST)
ஸ்பெயினில் பென்சன் பணத்திற்காக இறந்த தாயின் பிணத்துடன் மகன் ஒரு வருட காலம் வாழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஸ்பெயினில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் வீட்டில்  உருக்குலைந்த  நிலையில் உள்ள பெண்ணின் உடலைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் போலீஸார் அந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
இதையடுத்து போலீஸார் அந்த பெண்மணியின் மகனிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலமானது. அதில் தாய் இறந்து ஒரு வருடமாகியும் அவரது பென்சன் பணத்திற்காக தாயாரின் மறைவு குறித்து யாருக்கும் தெரிவிக்காமல், உடலை வீட்டிற்குள்ளேயே வைத்துள்ளான். போலீஸார் அந்த கொடூரனை கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஆரஞ்சு அலெர்ட்..! 3 நாட்களுக்கு நீலகிரிக்கு வராதீங்க! – மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்!

தெரு நாய்களுக்கு சோறு வெச்சது தப்பா? இளம்பெண்ணை கட்டையால் தாக்கிய ஆசாமி!

திருப்பதி செல்லும் ரயில்கள் ரேணிகுண்டா வரை மட்டும் செல்லும்: தெற்கு ரயில்வே

பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

இந்து, முஸ்லீம்களுக்கு தனித்தனி பட்ஜெட்டா? பிரதமர் பேச்சுக்கு ப சிதம்பரம் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments