Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எலி பிரியாணிக்கு ரெடியா? சூப்பர் மார்க்கெட்டால் நொந்து போன நபர்..

Webdunia
புதன், 24 அக்டோபர் 2018 (14:53 IST)
சூப்பர் மார்க்கெட்டில் தாம் வாங்கிய அரிசி பாக்கெட்டில் எலி செத்துக் கிடந்ததை கண்டு வாடிக்கையாளர் ஒருவர் அதிர்ச்சியடைந்திருக்கிறார்.
ஜெர்மனியில் ரிச்சர்ட் என்ற நபர் 2 நாட்களுக்கு முன்னர் சூப்பர் மார்க்கெட்டிற்கு பர்சேஸுக்காக சென்றுள்ளார். அங்கு அவர் வீட்டிற்கு தேவையான மளிகைப் பொருட்கள் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
 
தான் வாங்கி வந்த அரிசி பாக்கெட்டை சமைத்த அவருக்கு பேரதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. ஏனென்றால் அந்த அரிசி பாக்கெட்டில் எலி ஒன்று செத்து கிடந்துள்ளது. 
 
இதுகுறித்து டிவிட்டரில், சூப்பர் மார்க்கெட்டுக்கு கேள்வி எழுப்பிய ரிச்சார்ட், எப்படி இந்த எலி அரிசி பாக்கெட்டிற்குல் வந்தது என்று ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் இந்த எலியிலிருந்து வரும் துர்நாற்றத்தால் எனது மனைவி கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு வாந்தி எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
 
இதற்கு பதிலளித்த அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம், சிரமத்திற்கு மன்னியுங்கள் இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments