Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரச்சாரத்தில் ஈடுபட்ட வேட்பாளருக்கு கத்திக்குத்து

Webdunia
வெள்ளி, 7 செப்டம்பர் 2018 (12:16 IST)
பிரேசிலில் நடைபெற இருக்கும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் பொதுமக்களிடையே பேசிக்கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் அவரை கத்தியால் குத்தினர்.
பிரேசிலில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் சோசியல் லிபரல் கட்சி சார்பில் முன்னாள் ராணுவ தளபதி ஜெர் போல் சோனரோ (63) போட்டியிடுகிறார். இவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது.
 
இந்நிலையில் அவர் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். நூற்றுக்கணக்கான மக்களுக்கு நடுவே அவர் உணர்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். பலர் அவரை புகைப்படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர், ஜெர் போல் சோனரோவை கத்தியால் வயிற்றுப்பகுதியில் குத்தினான். இதனால் நிலைகுலைந்துபோன அவர், மயக்கம்போட்டு விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments