ஒரு ட்ரெஸ் 15 ரூவா.. ஷாப்பிங் மாலை கொள்ளையடித்து சென்ற மக்கள்!

Prasanth Karthick
திங்கள், 2 செப்டம்பர் 2024 (10:38 IST)

பாகிஸ்தானில் புதிதாக திறக்கப்பட்ட மாலில் மலிவு விலையில் பொருட்கள் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் கதவுகளை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

பாகிஸ்தானில் 2021 வெள்ளத்திற்கு பிறகு அசாதாரணமான பொருளாதர மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே தவிக்கும் நிலை உண்டாகியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கராச்சியில் புதிய ஷாப்பிங் மால் ஒன்றை திறந்துள்ளார்.

 

தொடக்க விழா சலுகையாக இந்திய மதிப்பில் ரூ.15க்கு துணிகள் வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்ததால், காலை முதலே மக்கள் கூட்டம் ஷாப்பிங் மால் வாசலில் காத்திருக்கத் தொடங்கியுள்ளனர். மால் திறக்கப்பட்டதும் முண்டியடித்துக் கொண்டு மக்கள் உள்ளே நுழைந்ததால் கண்ணாடி கதவுகள் உடைந்தன.
 

ALSO READ: அயலகத்தில் வாஞ்சையோடு அணைத்துக்கொள்ளும் உறவுகள்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி..!!
 

அதைப்பற்றி கவலைப்படாத மக்கள் உள்ளே புகுந்து கிடைத்த பொருட்கள், துணிகளை அள்ளிச் சென்றுள்ளனர். இந்த நெரிசலில் பலரும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. மக்களை மாலை விட்டு வெளியேற்ற அதன் பாதுகாவலர்கள் பெரிய தடிகளை எடுத்து அடித்து அவர்களை விரட்டும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்கள் பற்றாக்குறை எதிரொலி.. ஒரு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்..!

இண்டிகோ விமானம் ரத்து எதிரொலி: காணொளி காட்சி மூலம் ரிஷப்சனில் கலந்து கொண்ட மணமக்கள்..!

தனியார்களை நம்பி, அதுவும் 2 நிறுவனங்களை மட்டும் நம்பினால் இப்படித்தான்.. இண்டிகோ விவகாரம் குறித்து எச்சரிக்கை..!

தமிழகத்தில் 7 நாட்களுக்கு மழை தொடரும்: இன்று கனமழைகு வாய்ப்பு எங்கே?

திருப்பரங்குன்றம் விவகாரம்: திமுக எம்.பி.க்களின் கோரிக்கை மாநிலங்களவையின் நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments