போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்த மருத்துவர் கைது

Webdunia
புதன், 19 செப்டம்பர் 2018 (11:40 IST)
அமெரிக்காவில் மருத்துவர் ஒருவர் போதை மருந்து கொடுத்து 100 பெண்களை கற்பழித்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடவுளுக்கு இணையாய் பார்க்கப்படுபவர்கள் மருத்துவர்கள். ஏனென்றால் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றுவதில் அவர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றனர். ஆனால் சில மருத்துவர்கள் செய்யும் சில மட்டமான செயல்களால் ஒட்டுமொத்த மருத்துவத் துறையின் பெயரே சீரழிகிறது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவன் கிரேன்ட் வில்லியம் ரோபிசியஸ் (38). இவன் ஒரு எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர். குடிக்கு அடிமையான இவன் பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளான்.
 
அப்போது பார்களுக்கு வரும் இளம்பெண்களை தனது பேச்சின் மூலம்  வசியப்படுத்துவான். பின் போதைப் பொருட்களை கொடுத்து அவர்களை கற்பழித்து வந்தான். இதில் கொடுமை என்னவென்றால் இதற்கு அவனது காதலியும் கூட்டு.
இதுவரை  போதை மருந்து கொடுத்து 100 பெண்களுக்கு பேருக்கு மேற்பட்டோரை இவன் கற்பழித்துள்ளான். சமீபத்தில் இதுகுறித்து பெண்மணி ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வில்லியம்ஸையும், அவனது காதலியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட ஆடை.. மொத்த மதிப்பு ரூ.9.5 கோடி..!

கரப்பான் பூச்சியை கொல்ல முயன்றபோது நடந்த விபரீதம்.. பெண் பரிதாப பலி!

அடுத்த கட்டுரையில்
Show comments