Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த தந்தையுடன் செல்பி எடுத்த மாடல் அழகி

Webdunia
சனி, 21 ஜூலை 2018 (08:24 IST)
மாடல் அழகி ஒருவர் அவரது தந்தை இறந்ததை செல்பி எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செர்பியாவை சேர்ந்த ஜெலிகா லூபியிக் என்ற இளம்பெண் மாடல் அழகியாக உள்ளார். ஜெலிகாவின் தந்தை வயது முதிர்ச்சியின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
 
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விளம்பர பைத்தியமான ஜெலிகா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இறந்து கிடந்த தனது தந்தையின் உடல் முன்பு செல்பி எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்பது எங்களது ஆசை, ஆனால் அது நமது கையில் இல்லை. ஒரு நல்ல மகளாக என்னை வளர்த்ததற்கு எனது தந்தையின் ஆத்மா சாந்தி அடையட்டும் என பதிவிட்டிருந்துள்ளார். 
 
இதனைப் பார்த்த பலர் ஆத்திரமடைந்து, மனநோயாளிகள் மட்டுமே இதுபோன்ற பதிவுகளை வெளியிடுவார் என மெசேஜ் அனுப்பினர். கடும் எதிர்ப்புகள் கிளம்பவே, ஜெலிக்கா அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து நீக்கியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

அடுத்த கட்டுரையில்
Show comments