Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொழும்பு விமானநிலையத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு: அதிர்ச்சி தகவல்

Webdunia
திங்கள், 22 ஏப்ரல் 2019 (07:32 IST)
நேற்று உலகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்த நிலையில் இலங்கையில் உள்ள முக்கிய தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு சம்பவத்தால் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 500 பேர் இந்த குண்டுவெடிப்பில் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வெடிகுண்டு சம்பவத்திற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன.
 
இந்த நிலையில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இலங்கையின் முக்கிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அந்நாட்டு ஜனாதிபதி சிறிசேனா பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் சற்றுமுன் கொழும்பு விமானநிலையத்தில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமானநிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும், சக்திவாய்ந்த அந்த வெடிகுண்டு செயல் இழக்கச் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நடிகர்களுக்கு கொக்கேன் கொடுத்தது யார்.? நடிகர் நடிகைகள் உடல் பரிசோதனை செய்க..! வீரலட்சுமி..!!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் பேசவில்லை..! பிரதமர் மோடி..!!

என்ன திமிரு இருந்தா என் லவ்வரையே கல்யாணம் பண்ணுவ! மாப்பிள்ளையை கத்தியால் குத்திய முன்னாள் காதலன்! – அதிர்ச்சி வீடியோ!

மனைவியை அடித்துக் கொன்ற கணவர்.! உடலை தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..!!

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு கேலிக் கூத்து.! ஓட்டு சதவீதத்தில் குளறுபடி..! இபிஎஸ் விமர்சனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments