Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் மசூதி குண்டு வெடிப்பு.. ”நாங்கள் தான் பொறுப்பு”.. ஐ.எஸ்.அமைப்பு பகீர்

Arun Prasath
ஞாயிறு, 12 ஜனவரி 2020 (12:48 IST)
பாகிஸ்தானில் மசூதி ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் தலைநகர் குவட்டாவில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மக்கள் தொழுகையில் ஈடுபட்டபோது, திடீரென பயங்கரமான குண்டு வெடித்தது. இதில் ஒரு போலீஸ் அதிகாரி உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் உயிரிழந்ததாகவும் மாகாண உள்துறை அமைச்சர் ஜியா லாங்கோவ் தெரிவித்துள்ளார். இதனிடையே ”இந்த தற்கொலை குண்டு சம்பவத்திற்கு நாங்கள் தான் பொறுப்பு”என ஐ.எஸ்,. பயங்கரவாத அமைப்பு கூறியுள்ளது. கடந்த வாரத்தில் குவாட்டாவில் நடந்த இரண்டாவது குண்டு வெடிப்பு சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

பிரதமர் மோடியை சந்தித்த 14 வயது வைபவ் சூரியவன்ஷி.. வாழ்த்து தெரிவித்து எக்ஸ் பதிவு.!

அடுத்த கட்டுரையில்
Show comments