Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கதிகலங்கவைத்த சம்பவம்: பசிக்கொடுமையால் உயிரிழந்த 7 வயது சிறுமி

Webdunia
ஞாயிறு, 16 டிசம்பர் 2018 (13:54 IST)
கவுதமாலாவைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் பசிக்கொடுமையால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கவுதமாலாவைச் சேர்ந்த நேரி ஹில்பெர்டோ கால் கஸ் தனது 7 வயது மகள் ஜாக்லின் காலுடன் கவுதமாலாவில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் வேண்டி சக அகதிகளுடன் நடைபயணம் மேற்கொண்டனர். உணவின்றி நீண்ட தூரம் சென்ற சிறுமி மிகவும் களைப்புடன் இருந்தார்.
 
இந்நிலையில் அமெரிக்க எல்லைப்பகுதியில் அமெரிக்கா பாதுகாப்புப்படையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஏற்கனவே மிகவும் களைப்புடன் இருந்த சிறுமி, போலீஸார் கைது செய்த பதற்றத்தில் மயக்கம் போட்டு விழுந்தார்.
 
இதனையடுத்து சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உணவின்றி 7 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பலரை பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments