பியுகோ எரிமலை வெடிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்வு

Webdunia
வியாழன், 7 ஜூன் 2018 (13:10 IST)
கவுதமாலா நாட்டில் உள்ள பியுகோ எரிமலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.

 
 
கவுதமாலா நாட்டின் தலைநகர் கவுதமாலா சிட்டிக்கு 40 கி.மீ தொலைவில் பியூகோ எரிமலை அமைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பியூகோ எரிமலை திடீரென்று வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து 10 கி.மீ தொலைவிற்கு செந்நிற, 700 டிகிரி வெப்பம் மிகுந்த லாவா வெளியேறியது.
 
இதனால் அங்குள்ள வீடுகள் லாவாவுக்கு இரையாகின. மேலும், இந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் லாவாவில் சிக்கிக்கொண்டனர். இதில் இருந்து மக்களை காப்பாற்ற அங்குள்ள பேரிடர் மீட்பு குழு போராடி வருகிறது. நேற்று வரை எரிமலை வெடிப்பில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 69 ஆக இருந்தது. ஆனால், தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது.
 
நேற்று மீட்பு படையினர் அங்குள்ள பகுதிகளில் பணியில் ஈடுபட்டு இருந்த போது 30 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது. இன்னும் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் விஜய் ரோட் ஷோ!.. சொந்த ஊரில் காரியம் சாதிக்க முடியாத புஸ்ஸி ஆனந்த்..

தனி நீதிபதி தீர்ப்பு சட்டம்-ஒழுங்கைப் பாதித்தது: திருப்பரங்குன்றம் வழக்கில் தமிழக அரசு வாதம்

புதைக்கப்பட்ட இரண்டே நாட்களில் சிறுமியின் உடல் மாயம்.. தஞ்சை அருகே பரபரப்பு..!

மனைவிக்கு கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்.. 14 வயது மகளின் கழுத்தை பிளேடால் அறுத்த கணவர் கைது..!

2 நாட்களில் 200 விமானங்கள் ரத்து.. கிளம்புவதிலும் தாமதம்.. என்ன நடக்குது இண்டிகோ?

அடுத்த கட்டுரையில்
Show comments