Webdunia - Bharat's app for daily news and videos

Install App

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

Prasanth Karthick
வியாழன், 29 மே 2025 (21:09 IST)

கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட் மீண்டும் பரவத் தொடங்கியுள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி பல லட்சம் உயிர்களை பலிக் கொண்டது. அதன் பாதிப்பிலிருந்து உலகம் மீண்டு வர சில ஆண்டுகள் ஆனது. தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் கொரோனாவின் புதிய வேரியண்ட் பரவத் தொடங்கியுள்ளது.

 

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றான இது இந்தியா மற்றும் பல்வேறு ஆசிய நாடுகளில் பரவியுள்ளது. சீனா, சிங்கப்பூர், தாய்லாந்து நாடுகளில் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவில் மே 28 வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1000ஐ தாண்டியுள்ளது. இதில் கேரளாவில் அதிகளவில் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

 

இந்நிலையில் உலக அளவில் புதிய கொரோனா வேரியண்டால் 28 நாட்களில் 91,583 பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் கொரோனா பாதிப்புள்ள நாடுகளில் பொதுமக்கள் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. ரூ.70 முதல் ரூ.395 அதிகம் என தகவல்..!

விஜய் பேசுவதை கண்டுகொள்ளாதீர்.. தொண்டர்களுக்கு ஈபிஎஸ் அறிவுறுத்தல்..!

உலகிலேயே மிக சுவையான பீர்! இந்திய பீர் வகைக்கு கிடைத்த உலகளாவிய விருது!

மது போதையில் நடனமாட சொன்ன மணமகன் நண்பர்கள்: மணமகள் எடுத்த அதிர்ச்சி முடிவு..!

கமலா ஹாரிஸின் பாதுகாப்பு திடீர் ரத்து: அமெரிக்க ரகசிய சேவை விளக்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments