Webdunia - Bharat's app for daily news and videos

Install App

86 வயது கன்னியாஸ்திரியை கதறக் கதற கற்பழித்துக் கொலை செய்த கும்பல்

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2015 (15:21 IST)
தென்னாப்பிரிக்காவில் 86 வயது கன்னியாஸ்திரியை ஒரு கும்பல் கற்பழித்துக் கொலை செய்துள்ளது.
 
தென்னாப்பிரிக்காவிலுள்ள இக்சோப்போ நகரில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த சில கன்னியாஸ்திரிகள் தங்கியுள்ள சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட்டுக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரு கும்பல் நுழைந்தது.
 
அங்கு தூங்கிக் கொண்டிருந்த 86 வயது கன்னியாஸ்திரியான கெர்ட்ரட் டிய்பென் பேச்சர் என்பவரின் கை, கால்களை அந்தக் கும்பல் கட்டிப் போட்டு, அவரை கதறக் கதற கற்பழித்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்தனர். அத்துடன் அங்கிருந்த பணத்தையும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
சேக்கர்ட் ஹார்ட் கான்வென்ட் 1923 ஆம் ஆண்டில் இருந்து இயங்கிவருகிறது. இங்கு கத்தோலிக்க பெண்கள் கன்னியாஸ்திரியாவதற்கு பயிற்சி அளிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments