Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மர்மநபர் துப்பாக்கிச் சூடு; 8 பேர் பலி; மெக்சிகோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Arun Prasath
செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (20:31 IST)
கோப்புப்படம்

மெக்சிகோவில் ஸ்லாட் மிஷன் அரங்கம் பகுதியில் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட்டதில் 8 பேர் பலியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ நாட்டின் மிக்லோகன் மாநிலம் மேக்டலினா மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்லாட் மிஷன் அரங்கம் பகுதியில் மர்ம நபர் ஒருவர் நுழைந்து அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார். இந்த சம்பவத்தில் 8 பேர் பலியாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒருவர் காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். இத்தாக்குதல் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மெக்சிகோ நாட்டில் போதை பொருள் கடத்தல் அதிகமாகி வரும் நிலையில், பல குழுக்களுக்கு இடையே கடும் மோதல் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன என்று பல செய்திகள் தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments