பாகிஸ்தானில் 50 வயது முதியவர் ஒருவருக்கு 10 வயது சிறுமியுடன் திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கு துணையாக சிறுமியின் தந்தையும் இருந்துள்ளார்.
பாகிஸ்தானின் ஜகோபாபாத்தில் சில தினங்களுக்கு முன்னர் 50 வயது முதியவரும் 10 வயது சிறுமியும் திருமணம் செய்ய இருப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் காவல் துறை உடனடியாக விரைந்து சென்று திருமணத்தை தடுத்து நிறுத்தி முதியவரை கைது செய்தனர்.
இந்த திருமணத்தை நடத்த இருந்த மத குருவும், திருமணத்துக்கு துணையாக இருந்த சிறுமியின் தந்தையும் காவல் துறையிடம் சிக்காமல் தப்பி ஓடியுள்ளனர். காவல் துறை நடத்திய விசாரணையில் சிறுமியின் தந்தை இந்த திருமணத்திற்காக 50 முதியவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் பணம் வாங்கியது தெரியவந்துள்ளது.
பணத்துக்காக தந்தையே தனது 10 வயது மகளை 50 வயது முதியவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றது அங்கு பரபரப்பாக பேசப்படுகிறது. பாகிஸ்தானில் இது போன்ற சிறு வயது திருமணங்கள் அதிகமாக நடைபெறுவதாக கூறப்படுகிறது.
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்