Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50 வயது பெண்ணிற்கு முத்தம் கொடுத்த 29 வயது இளைஞர்

Webdunia
வியாழன், 20 பிப்ரவரி 2014 (16:13 IST)
துபாயை சுற்றிப்பார்க்க வந்த லெபனான் பெண்ணை அத்துமீறி முத்தமிட்ட பாகிஸ்தான் வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
FILE

கடந்த நவம்பர் மாதம் லெபனான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் துபாய் நகரத்திற்குச் சுற்றுலா சென்றார்.

மெட்ரோ ரெயிலில் ஏறி ஜுமெய்ரா லேக் டவர்ஸ் நிலையத்தில் வந்திறங்கிய அவர், அப்பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு சென்று, ஒரு முகவரியை காட்டி, ‘இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும்?’ என்று கேட்டார். அந்த உணவகத்தின் ஊழியர் ஒருவர் அவருக்கு வழிகாட்டுவதாக கூறி அழைத்து சென்றார்.

அந்தப் பெண்ணை டாக்ஸி ஒன்றில் அமர வைத்த அந்த ஊழியர், டாக்சி புறப்படும் நேரம் பின் கதவை திடீரென்று திறந்து, ஆவேசத்துடன் அந்த பெண்ணின் மீது பாய்ந்து, அவரது உதட்டில் முத்தமிட முயன்றார். இதனால் பதறிப்போன அந்த பெண் அவரிடமிருந்து விலக முயற்சித்தார். அதற்குள், அந்த வாலிபரின் முத்தம் அந்த பெண்ணின் கன்னத்தில் பதிந்தது.

இதனால் பெண்ணின் கூச்சல் சத்தம் கேட்டு ஓடி வந்த சிலர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த அந்த 29 வயது வாலிபரை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். சுமார் 50 வயது மதிக்கத்தக்க அந்த லெபனான் பெண் அளித்த புகாரையடுத்து அந்த வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துபாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments