Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் 5 கோடி பேர் வேலையிழப்பு : அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை !!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (17:34 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் 5 கோடிக்கு அதிகமானோர் வேலையிழந்துள்ளனர். அதனால் வெளிநாடில் இருந்து வேலைக்கு எடுப்பதற்கான விசா வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரொனாவால் அமெரிக்காவில்  1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். அதில், 4ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் போன்று கொரோனாவை தடுக்க அமெரிக்க அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், கொரொனா பாதிப்பால் சுமார் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 33 லட்சம் பேர் உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்,அங்கு ஏராளமானோர் வேலை யிழந்துள்ள நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களை பணி அமர்த்துவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை நிறுத்தக் கோரி யுஎஸ் டெக் ஒர்க்கர்ஸ் என்ற அமைப்பு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments