Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவால் 5 கோடி பேர் வேலையிழப்பு : அமெரிக்க அதிபருக்கு கோரிக்கை !!

Webdunia
புதன், 1 ஏப்ரல் 2020 (17:34 IST)
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனா வைரஸை தடுக்க பல உலகநாடுகள் தீவிரமாக போராடி வருகின்றனர்.

இந்த நிலையில்,  அமெரிக்காவில் 5 கோடிக்கு அதிகமானோர் வேலையிழந்துள்ளனர். அதனால் வெளிநாடில் இருந்து வேலைக்கு எடுப்பதற்கான விசா வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என அந்நாட்டில் கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரொனாவால் அமெரிக்காவில்  1 லட்சத்து 88 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். அதில், 4ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவைப் போன்று கொரோனாவை தடுக்க அமெரிக்க அதிபர் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும், கொரொனா பாதிப்பால் சுமார் 5 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சுமார் 33 லட்சம் பேர் உதவித்தொகை கேட்டுவிண்ணப்பித்துள்ளனர்.

இந்த நிலையில்,அங்கு ஏராளமானோர் வேலை யிழந்துள்ள நிலையில்,  வெளிநாட்டில் இருந்து வேலைக்கு வருபவர்களை பணி அமர்த்துவதற்கான எச் 1 பி விசாக்கள் வழங்குவதை நிறுத்தக் கோரி யுஎஸ் டெக் ஒர்க்கர்ஸ் என்ற அமைப்பு அதிபர் டொனால்ட் டிரம்புக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments