Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோமாலியா: மார்க்கெட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலி

Webdunia
வியாழன், 10 மே 2018 (12:00 IST)
சோமாலியா மாகாணத்தில் உள்ள மொகடிஷீயில் உள்ள மார்க்கெட்டில் பயங்கராவதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
 
சோமலியா நாட்டில் அல்கொய்தா இயக்கத்தின் ஆதராவளர்களான அல் ஷபாப் பயங்கரவாதிகள் இயங்கி வருகின்றனர். இவர்கள் அந்நாட்டில் அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்களை நிகழ்தி வருகின்றனர்.
 
அந்த வகையில் நேற்று இந்த பயங்கரவாதிகள் மொகடிஷுவில் அருகில் உள்ள லாயென் நகரில் இயங்கிவரும் மார்க்கெட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
 
ஏற்கனவே கடந்த மாதம் அல் ஷபாப் பயங்கராவதிகள் மொகடிஷு பகுதியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடத்திய தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments