வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை.. 200 நிறுவனங்கள் ஒப்புதல்.!

Siva
செவ்வாய், 28 ஜனவரி 2025 (17:00 IST)
வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்பது உலகம் முழுவதும் பல நாடுகளில் கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கிலாந்து நாட்டில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற நடைமுறையை அந்நாட்டில் உள்ள 200 நிறுவனங்கள் கடைபிடிக்க உள்ளன.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை என்பது பணியாளர்களுக்கு சோர்வை ஏற்படுத்தி வருவதாகவும் எனவே நான்கு நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்த உள்ளதாகவும் இங்கிலாந்து தெரிவித்துள்ளது.

 சோதனை முயற்சியாக இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டபோது 100 நிறுவனங்கள் அதற்கு ஒப்புதல் அளித்தன. இந்த திட்டத்தால் சம்பளம், சலுகை எதுவும் குறைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டது. 100 நிறுவனங்கள் நடத்திய சோதனையை முயற்சியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து தற்போது 200 நிறுவனங்கள் வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலையை நிரந்தரமாக நடைபெற நடைமுறைப்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 200 நிறுவனங்களில் பணிபுரியும் 5000 ஊழியர்கள் இனி திங்கள் முதல் வியாழன் வரை மட்டுமே பணிபுரிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் நிறைவுடன் இருப்பார்கள் என்றும் வேலை செய்யும் நான்கு நாட்களிலும் அவர்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாயை நிரூபிக்க சானிட்டரி நாப்கின்களை காட்டு.. அடாவடி செய்த 2 மேற்பார்வையாளர்கள் மீது வழக்கு!

மேயர் மற்றும் மேயரின் கணவர் இரட்டை கொலை வழக்கு: 5 பேருக்குத் தூக்கு தண்டனை!

மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்.. HP, Dell, மற்றும் Acer நிறுவனங்களுடன் ஒப்பந்தம்..!

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments