Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் மருத்துவமனைக்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 28 நவம்பர் 2015 (11:15 IST)
அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தில் மருத்துவமனைகுள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல்துறை அதிகாரி உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 
 

 
அமெரிக்காவின் கொலோரடோ மாகாணத்தில் மருத்துவமனையின் குடும்பக் கட்டுப்பாட்டு மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சூட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.
 
கிட்டதட்ட 5 மணிநேரம் அங்கிருந்தவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துவைத்து பொதுமக்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த கொலோராடோ காவல்துறையினர் அந்த நபருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பட வில்லை என்பதால் போலீசாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டார்.
 
இந்த துப்பாக்கிச்சூட்டில் காவலர்கள் உட்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 3 பேரில் ஒருவர் காவல்துறை அதிகாரி என்று  கொலோரடோ மேயர் ஜான் கூறியுள்ளார்.

இது என்ன டிசம்பர் மாதமா? அதிகனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

என் நெஞ்சில் எட்டி உதைத்தார்.. ஆம் ஆத்மி பெண் எம்.பி. ஸ்வாதி மாலிவால் புகாரில் அதிர்ச்சி தகவல்..!

திருவண்ணாமலைக்கு மட்டும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்து வசதி! – புதிய அறிவிப்பு!

சவுக்கு சங்கருக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? காயத்ரி ரகுராம் கேள்வி..!

100 யூனிட் மின்சாரம் ரத்து என்ற தகவல் உண்மையா? மின் வாரியம் விளக்கம்

Show comments