Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நைஜர் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட 20 குழந்தைகள் மரணம்

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2016 (06:17 IST)
சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு அல்ஜீரியாவுக்கு சென்ற கும்பல் நைஜர் பாலைவனத்தில் ஏராளமான நபர்களை இறக்கிவிட்டுள்ளனர். அதில் 20 குழந்தைகள் உட்பட 34 பேர் மரணம் அடைந்துள்ளனர்.


 

 

 
மாலி மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்த பெரும்பாலான மக்கள் உள்நாட்டுப் போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களால் உயிருக்குப் பயந்து அண்டைநாடுகளுக்கு அகதிகளாக குடியேறச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொன்டிருக்கிறது. அந்தவகையில்,  பெரும்பாலானோர் சட்டவிரோதமாக அல்ஜீரியாவுக்கு பயணம் செய்து, பின்னர் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்கின்றனர். இவ்வாறு செல்லும்போது கடந்த மாதம் படகு விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். 
 
அதுபோன்று சட்டவிரோதமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒரு கும்பல் நைஜர் பாலைவனத்தில் ஏராளமான நபர்களை இறக்கிவிட்டுள்ளனர். இறக்கிவிடப்பட்ட 20 குழந்தைகள், 9 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 34 பேர் கடந்த வாரம் இறந்து கிடந்தது கண்டறியப்பட்டதாக நைஜர் உள்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
போரில் இறந்து விடுவோம் என்று வாழும் ஆசையில் உயிருக்கு பயந்து அண்டை நாடுகளுக்கு அகதிகளாக செல்லும் பலர் செல்லும் வழியிலே உயிரிழப்பது மிகவும் துக்கமான ஒன்று.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments