Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் பயங்கரம்: பேருந்து மோதிய விபத்தில் 19 பேர் பலி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (08:45 IST)
பாகிஸ்தானில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானதில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
பாகிஸ்தானில் தேரா காஜி கான் நகரில், இரு பேருந்துகள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலே பலியானார்கள்.
 
விபத்துகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், இடிபாடுகளில் சிக்கிய 40க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது.
 
பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பஸ் டிரைவரின் அலட்சியத்தாலேயே இந்த விபத்து நடைபெற்றிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments