Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லை தொடர்பாக பழங்குடியினர் இடையே மோதல் -16 பேர் பலி

Webdunia
செவ்வாய், 16 மே 2023 (23:05 IST)
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.

இங்குள்ள வடமேற்குப் பிராந்தியத்தில் உள்ள தர்ரா ஆடம் கெஜ் பகுதியில் சில ஆண்டுகளாக,  நிலக்கரிச் சுரங்கம் எல்லை தொடர்பாக சன்னிகேல் மற்றும் ஜர்குன் கெஸ் ஆகிய இரு பழங்குடியினர் இடையே மோதல் இருந்து வருகிறது.

இரு பழங்குடியினர் மோதல் அடிக்கடி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் இவர்களுக்கு இடையில் மீண்டும் மோதல் ஏற்பட்டதில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதில், 16 பேர் உயிரிழந்ததாகவும் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீஸார், இருதரப்பினர் இடையேயான மோதலை நிறுத்தினர்.

சண்டையில் காயமடைந்தவர்களை மீட்டு பெஷாவரில் உள்ள  மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது இப்பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments