இலங்கை: பரவி வரும் காய்ச்சலால் 15 பேர் பலி

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (19:03 IST)
இலங்கையில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் 15 பேர் பலியாகியுள்ள நிலையில் 50க்கும் மேறபட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


 
 
இலங்கையில் உள்ள தென் பிராந்தியத்தில் கடந்த ஒரு மாதமாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் 15 குழந்தைகள் உயிரிழந்தனர். இதில் 1 வயதில் இருந்து 7 வயது வரை உள்ள குழந்தைகளை அதிகமாக இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இதனால் நோய் பரவாமல் தடுக்க தென் பிராந்தியத்தின் மாத்தறை, முலடியான, அகுரெஸ்ஸ, தங்காலை, வலஸ்முல்ல, காலி ஆகிய கல்வி துறைகளுக்கு உட்பட்ட பள்ளிக்கூடங்களுக்கு 25ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த காய்ச்சல் பரவி வரும் பகுதிகளை சுகாதாரத்துறை அமைச்சகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த நோயினால் உயிரிழந்தவர்களின் இரத்த மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தி திரைப்படங்கள், பாடல்களுக்கு தடை: மசோதா கொண்டு வர தி.மு.க. அரசு பரிசீலனையா?

மீண்டும் ஒரு பல்க் வேலைநீக்க நடவடிக்கை எடுக்கும் அமேசான்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

தீபாவளியை முன்னிட்டு தாம்பரத்தில் போக்குவரத்து மாற்றம்! வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது!? - முழு விவரம்!

மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்.. உடன் வந்த நண்பர் தான் காரணமா?

அமெரிக்காவுக்கான சர்வதேச தபால் சேவை மீண்டும் தொடங்கியது: 2 மாதத்திற்கு பின் என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments