Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாயின் இரண்டாவது கணவர், மாமா, தாத்தாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி!

தாயின் இரண்டாவது கணவர், மாமா, தாத்தாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி!

தாயின் இரண்டாவது கணவர், மாமா, தாத்தாவால் சீரழிக்கப்பட்ட சிறுமி!
, செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (12:27 IST)
3 வயது சிறுமி ஒருவரை அந்த சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர், மாமா மற்றும் தாத்தா ஆகியோர் தொடர்ந்து பாலியல் பலாதகாரம் செய்து வந்துள்ள சம்பவம் இலங்கையில் நடந்துள்ளது.


 
 
இலங்கையின் தனமல்விலா பகுதியில் உள்ள உஸ்ஸகல கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் தனது உறவினர்களால் தொடர்ந்து பாலியல் துன்புறத்தலுக்கு ஆளாகி வருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காவல் துறை அவர்களை கைது செய்ய அங்கு சென்றது.
 
இந்த பாலியில் குற்றச்சாட்டில் சிறுமியின் தாயின் இரண்டாவது கணவருக்கு தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் போலீசார் அங்கு சென்ற போது அவர் தலைமறைவாகியுள்ளார். சிறுமியிடம் நடத்திய விசாரணையில் அவரது தாயும் இதற்கு உடந்தையாக இருந்தது தெரியவந்துள்ளது.
 
மேலும் சிறுமியின் தாத்தா மற்றும் இராணுவத்தில் பணிபுரியும் அவரது மாமா ஆகியோரும் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்ததை அடுத்து அவர்கள் மூன்று பேரும் காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினகரனிடம் தொடர் விசாரணை - டெல்லியில் என்ன நடக்கிறது?