Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்தடுத்து உயிரிழக்கும் யானைகள், உலகையே உலுக்கும் துயர சம்பவம்

Arun Prasath
புதன், 9 அக்டோபர் 2019 (18:24 IST)
தாய்லாந்தில் சில தினங்களுக்கு முன் 6 யானைகள் அருவியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், தற்போது அடுத்தடுத்து 5 யானைகள் தவறி விழுந்து உயிரிழந்த செய்தி உலகையே உலுக்கியுள்ளது.

தாய்லாந்து நாட்டில் உள்ள கவோயை தேசிய பூங்காவில் ஹா நரோக் என்னும் அருவி உள்ளது. அந்த அருவிக்கு ஒரு குட்டி யானை தண்ணீர் குடிக்க சென்றது, அப்போது அந்த யானை குட்டி தவறி அருவிக்குள் விழுந்தது. அதன் பின்பு அந்த குட்டியை காப்பாற்ற சென்ற தாய் யானை உட்பட, 5 யானைகள் அருவிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தன. இந்த சம்பவம் உலகையே உலுக்கியது.

இந்நிலையில், தற்போது அதே அருவியில் மேலும் 5 யானைகள் தவறி விழுந்து உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. ஹா நரோக் நீர்வீழ்ச்சியை நரகத்தின் நீர்வீழ்ச்சி என்று கூறுவார்களாம், கடந்த 1992 ஆம் ஆண்டு கிட்டதட்ட 8 யானைகள் இந்த அருவியில் விழுந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மேலும் 5 யானைகள் உயிரிழந்துள்ளதை உறுதிபடுத்துகின்றன.

இது குறித்து வன உயிர் நண்பர்களின் அறக்கட்டளை நிறுவனர் எட்வின் வீக் கூறுகையில், யானைகள் எப்போதும் கூட்டமாக வாழ்பவை, மேலும் அவை உணவு தேடலுக்காக கூட்டமாக பாதுகாப்பாக செல்லும். இவ்வாறு கூட்டத்திலிருந்து விலகிய மனமுடைந்து அருவியில் விழுந்து இறந்திருக்கலாம்” என கூறியுள்ளார். 11 யானைகள் அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் உலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments