இந்தியாவுக்கு ஈடான இராணுவ பலம் தங்களிடம் இல்லை என்றும், எனவே தங்களுக்கு கூடுதலான அணு ஆயுதங்கள் தேவையாக உள்ளதாகவும் கூறி, உலகின் வேறு எந்த நாடுகளைக் காட்டிலும் அதிகமான அணு ஆயுதங்களை பாகிஸ்தான் வேகமாக குவித்து வந்ததாக "விக்கிலீக்ஸ்" வெளியிட்டுள்ள ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் குறித்த தகவலை தெற்காசியாவுக்கான அமெரிக்க புலனாய்வு அதிகாரி பீட்டர் லாவாய், கடந்த 2008 ஆம் ஆண்டு 'நேட்டோ' பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் பாகிஸ்தான் குவித்து வரும் இந்த அணு ஆயுதங்கள் குறித்து பிரிட்டன், ரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் கவலை வெளியிட்டதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.