கொழும்ப ு: யாழ ் ப்பாணம ் காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் 2 சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் இன்ற ு அதிகால ை தற்கொலைத ் தாக்குதல் நடத்தினர்.
காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல்களான 'ருகு ண', ' நிமல வ' ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று அதிகாலை 5.10 மணியளவில ் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தி ன.
இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளத ு. மற்ற கப்பலுக்கு எ ந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும ் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் என்றும ் சிறிலங்கா கடற்படை செய்தித்தொடர்பாளர ் ட ி. க ே. பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.