லண்டனைச் சேர்ந்தவர் ஆண்டி லேம்ப ். சிறுநீரகம் பழுதடைந்ததால் டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார். மாற்றுச் சிறுநீரகம் பொருத்தினால் தான் உயிர் பிழைப்பார் என்ற நிலையில், அவரது மனைவி சமந்தா தன்னுடைய சிறுநீரகங்களில் ஒன்றை தானமாக அளித்தார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இருவரும் நலமடைந்தனர்.
இந்நிலையில் லேம்ப் தனது தோழியை காதலிப்பதாக, சமந்தா சந்தேகமடைந்தார், சந்தேகம் உறுதியானதால், தானமாக அளித்த சிறுநீரகத்தை திரும்ப அளிக்கும்படி கேட்டுள்ளார்.
சமந்தாவின் குற்றச்சாட்டை மறுத்து வீட்டை விட்டு வெளியேறிய லேம்ப், மனைவியின் தோழியை காதலிக்கவில்லை என்றும், சமந்தாவின் வற்புறுத்தலால் தான் அவரது சிறுநீரகத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.