வடகொரியாவில் கடந்த சில மாதங்களாகப் பெய்துவரும் மழையால் அந்நாட்டின் பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்துள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவசரகால உதவியாக உணவு மற்றும் எண்ணெய் பொருட்களை ஐ.நா. சபை கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது என்று ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் நெசிர்கி இன்று நிருபர்களிடம் கூறியுள்ளார்.