Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெட்டிக் கொல்லப்பட்ட பெண் புலிகள் – படங்கள் வெளியீடு

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2011 (17:53 IST)
FILE
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்க இராணுவம் நடத்திய இனப் படுகொலைப் போரின் இறுதி கட்டத்தில், முள்ளி வாய்க்கால் பகுதியில் தங்களிடம் சிக்கிய விடுதலைப் புலிகள் இயக்கதின் பெண் போராளிகளை சிறிலங்க இராணுவத்தினர் வெட்டிக் கொன்ற புகைப்படங்களை அதிர்வு இணையத் தளம் வெளியிட்டுள்ளது.

தமிழ் இளைஞர்களையும், பெண்களையும் கை, கால்களைக் கட்டி குறுகியத் தூரத்தில் இருந்து சுட்டுக் கொன்றதற்கான வடுக்களுடனும், எரிக் குண்டுகளால் கொல்லப்பட்ட இளைஞர்கள் உடலங்களும் இந்தப் புகைப் படங்களில் அதிர்வு இணையத் தளம் வெளியிட்டுள்ளது.

FILE
இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் சிறிலங்க இராணுவ தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவிற்கு ஆதரவான ஒரு சிங்கள சிப்பாய் ஊடாக வெளியிடப்பட்டுள்ளது என்றும், அவரின் கைப்பேசியில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்கள் அனைத்தையும் ஐ.நா.வின் சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகளுகள் குறித்த அறிக்கையாளரான பிலிப் ஆல்ஸ்டனிடம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதிர்வு தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, தங்களுக்கு இப்படுகொலைகள் தொடர்பான காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளதெனவும், அது மிகவும் கோரமாக உள்ளதால் வெளியிடாமல், நேரடியாக ஐ.நா.விற்கு அனுப்பியுள்ளதாகவும் அதிர்வு கூறியுள்ளது.

அதிர்வு இணையத் தளத்தில் வெளியான சில புகைப்படங்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments