Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் 24,000 படையினர் பலி

Webdunia
வெள்ளி, 22 மே 2009 (17:13 IST)
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க ராணுவம் 24 ஆயிரம் படை வீரர்களை இழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை செயலர் கோத்தபய ராஜபகச தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அந்நாட்டு தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், விடுதலைப் புலிகளை முற்றிலுமாக ஒழிப்பதற்காக சிறிலங்க ராணுவம் கடுமையான இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த 30 ஆண்டுகளாக நடந்து வரும் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்க ராணுவத் தரப்பில் 23,790 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் கடந்த 2006 ஆகஸ்டிற்கு பின்னர் துவங்கிய யுத்தத்தில் மட்டும் சிறிலங்காவின் ராணுவம், கடற்படை, விமானப்படை, காவல்துறையைச் சேர்ந்த 6,261 பேர் உயிரிழந்துள்ளனர்; 29,551 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

எனினும் சிறிலங்க ராணுவத்திற்கு எதிரான போரில் எத்தனை விடுதலைப்புலிகள் உயிரிழந்தனர் என்ற விவரத்தை கோத்தபய ராஜபகச வெளியிடவில்லை. படையினருக்கு எதிரான போரில் 22 ஆயிரம் புலிகள் உயிரிழந்ததாக விடுதலைப்புலிகள் தரப்பில் கடந்தாண்டு தெரிவிக்கப்பட்டது நினைவில் கொள்ளத்தக்கது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments