Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விடுதலைப்புலிகளின் தபால் தலைகள்: பிரானஸ்க்கு இலங்கை கோரிக்கை

விடுதலைப்புலிகளின் தபால் தலைகள்: பிரானஸ்க்கு இலங்கை கோரிக்கை
கொழும்பு , திங்கள், 9 ஜனவரி 2012 (13:38 IST)
விடுதலைப்புலிகளின் தபால் தபால் தலைகள் ஒட்டப்பட்ட கடிதங்களை தங்கள் நாட்டிற்கு அனுப்ப வேண்டாம் என்று பிரான்ஸ் நாட்டிற்கு இலங்கை தபால் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட தபால் தலைகளை பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன.

சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு தபால் தலையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால், அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதாவது,அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil