வளர்த்த நாயைத் திருமணம் செய்து கொண்ட லண்டன் பெண்!
, செவ்வாய், 11 மார்ச் 2014 (13:54 IST)
லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிசயமாக தான் வளர்த்த நாயையே திருமணம் செய்துகொண்டார்.
அமண்டா ரோட்ஜர்ஸ் என்ற இந்த பெண்மணிக்கு வயது 47. இவர் 20 ஆண்டுகளுக்கு முன்பாக ஒருவரை திருமணம் செய்துகோண்டார். ஆனால் இந்த உறவு நீடிக்கவில்லை விவாகரத்தில் போய் முடிந்தது.
அப்போது முதல் தனிமையில் வாழ்ந்து வந்த அமண்டா ஷீபா என்ற செல்ல நாயை வளர்த்து வந்தார்.