4 நாள் பயணமாக இலங்கை சென்று மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அந்நாட்டு அதிபர் ராஜபக்சவை இன்று காலை சந்தித்து பேசினார்.
கொழும்பில் காலை எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு விருந்தளித்த ராஜபக்சவுடன், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்டித் தருவது பற்றி ஆலோசனை நடத்தினார்.
மேலும் தமிழர்கள் மீதான தாக்குதல் பற்றியும் ராஜபக்சவுடன் விவாதித்தார் எஸ்.எம்.கிருஷ்ணா.
தமிழக பிரதிநிதிகளுடன் பேசி நிலுவையில் உள்ள பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்று வலியுறுத்திய எஸ்.எம்.கிருஷ்ணா, புதிய பரிமாணத்துக்கு இந்தியா - இலங்கை உறவை கொண்டு செல்வது பேச்சுவார்த்தை என்றார்.