Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முஷாரப்பை தண்டிக்க 71 % பாகிஸ்தானியர்கள் ஆதரவு

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (19:39 IST)
பாகிஸ்தானில் அவசர நிலை பிரகடனத்தைக் கொண்டு வந்ததற்காக முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்பை தண்டிக்க அந்நாட்டின் 71 விழுக்காடு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

முஷாரப் அதிபராக இருந்தபோது, கடந்த 2007 ஆம் ஆண்டில் கொண்டுவந்த அவசர நிலை பிரகடனம் சட்டவிரோதமானது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு வழங்கியது.

அதே சமயம் இதற்காக முஷாரப்புக்கு தண்டனை அளிப்பது குறித்து பாகிஸ்தான் நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டது.

இந்நிலையில், அவசர நிலை பிரகடனத்தைக் கொண்டு வந்ததற்காக முஷாரப் தண்டிக்கப்பட வேண்டுமா என்பது குறித்து மக்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் 71 விழுக்காடு பேர் முஷாரப் தண்டிக்கப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.19 விழுக்காடு பேர் இலேசான தண்டனை அளிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். 4 விழுக்காடு பேர் கருத்து எதுவும் கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments