Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகாமில் கனடா நாட்டவர் : இலங்கையிடம் கனடா கோரிக்கை

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (15:23 IST)
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் எத்தனை பேர் கனடா குடிமக்கள் என்பதையிட்டு உறுதிப்படுத்தக்கூடிய தகவலைத் தருமாறு சிறிலங்காவிடம் கனடா கேட்டுள்ளது.

இது தொடர்பாக கனடா அயலுறவு அமைச்ச அதிகாரி பேச்சாளர் லோரா மார்க்கிள் கூறுகையில், கனடாவைச் சேர்ந்த நால்வர் வவுனியா முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்திருக்கின்ற போதிலும், அங்குள்ள இருவர் பற்றிய தகவல்களே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும் ஏனையவர்கள் தொடர்பு மூலமாகத்தான் அவர்கள் குறித்த தகவல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கனடா நாட்டு குடிமக்களின் எண்ணிக்கையை உறுதிப்படுத்துமாறு கொழும்பில் உள்ள கனடா தூதரகம் சிறிலங்கா அரசைக் கேட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments