Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மிரட்டலுக்கு பணிய மாட்டோம் : ஈரான்

மிரட்டலுக்கு பணிய மாட்டோம் : ஈரான்
தெஹ்ரான் , வியாழன், 3 செப்டம்பர் 2009 (18:57 IST)
அணு திட்டம் தொடர்பாக அமெரிக்கா உள்ளிட்ட ஆறு வல்லரசு நாடுகள் விதித்துள்ள கெடுவுக்கு பணியப்போவதில்லை என்று ஈரான் கூறியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்த மாத இறுதியில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்திற்கு முன்னதாகவே, ஈரான் தனது அணு திட்டம் தொடர்பாக நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மற்றும் ஐந்து வல்லரசு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில், இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் அயலுறவுத் துறை அமைச்சக பேச்சாளர் ஹஸ்ஸன், பேச்சுவார்த்தையிலும், கலந்துரையாடலிலும் நம்பிக்கையுள்ள நாடு ஈரான் என்றும், ஆனால் அவர்கள் ( வல்லரசு நாடுகள் ) மிரட்டல் மற்றும் அழுத்தம் மூலம் கெடு விதிக்க விரும்பினால், அது ஏற்கத்தக்கதல்ல என்றும், மிரட்டலுக்கு ஈரான் அடி பணியாது என்றும் தெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil