என்னஎன்ன விதங்களில் ஒரு விமானம் மாயமாகும் வாய்ப்பிருக்கிறது என்ற தெரிந்த மட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் முன் பின் தெரியாத காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.
1.
திருட்டு பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்த விவகாரம்: இது குறித்து அமெரிக்க முன்னாள் விமானப் போக்குவரத்துத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ என்ன கூறுகிறார் என்றால், திருட்டு பாஸ்போர்ட் என்பதனால் பயங்கரவாத தொடர்புடைய நபர், விமானம் எங்காவது வெடிக்கச்செய்ய பட்டிருக்கலாம் என்று கூற முடியாது. எதிர்கால ஒரு திட்டத்திற்காக பயங்கரவாதிகள் ஒரு வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
2.
விமானத்தின் பாகங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் பாம் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம்:
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராபர்ட் பிரான்சிஸ் கூறுகையில், "இந்த மாயமான சமாச்சாரம் கேள்விப்பட்டவுடன் நான் நினைத்தது என்னவெனில் ஏதோ காரணங்களால் விமானம் வெடித்துச் சிதறியிருக்கும், இதற்கான சிக்னல் எதுவும் இல்லாமலேயே இது நடந்திருக்கலாம் என்று. ராடாரிலிருந்து விமானம் சுவடின்றி மாயமாகியுள்ளது என்றால் அது காணாமல் போவதற்கு முன்பு எதிர்பாராதது ஏதோவொன்று நடந்துள்ளது. என்றார்.
3.
சரி செயற்கைக்கோள் தொழில் நுட்பம் என்னவாயிற்று? விமானம் வெடித்துச் சிதறியிரிந்தால் அதிலிருந்து வெளியாகும் உஷ்ணம் அல்லது வேறு ஏதாவது சிக்னல்களை சாட்டிலைட்கள் பிடித்து விடாதா? அமெரிக்க விமானப்படையில் இதே வேலையாக இருந்த நிபுணர் பிரையன் வீடன் என்ன கூறுகிறார் என்றால், "சாட்டிலைட்கள் அதுபோன்ற ஒன்றை படம் பிடிப்பது கடினம். 300 கிமீ-லிருந்து 1500 கிமீ தூரத்தில் கீழே நிகழும் ஒன்றை படம் பிடிப்பது கடினம், அது விமானமாகவே இல்லாமல் வேறு ஒன்றாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது.
ஆனாலும் ஒரு வாய்ப்பு உள்ளது. விண்வெளியில் 22,000 மைல்கள் அமெரிக்க அரசின் செயற்கைக்கோள் உலகம் முழுதும் நடப்பதை பிடிக்கக்கூடிய திறன் கொண்டது. அது பாலிஸ்டிக் ஏவுகணைகளை படம் பிடிக்கக்கூடியது. ஆனாலும் குண்டு வெடிப்பு போன்ற ஒன்றை அதனால் டிராக் செய்ய முடியுமா என்பது தெரியவில்லை.
4.
கடத்தல்: