மாயமான மலேசிய விமானம்: நிபுணர்கள் கூறுவது என்ன?
, செவ்வாய், 11 மார்ச் 2014 (15:50 IST)
மலேசியா ஏர்லைன்ஸ் 370 காணாமல் போய் நாட்கள் சென்று கொண்டிருக்கின்றன. இன்னும் விமானம் 239 பயணிகளுடன் என்னவாயிற்று என்பதன் சுவடு கூட தெரியவில்லை. இந்தப் புதிர் குறித்து நிபுணர்களே ஆடிப்போயுள்ளனர்.
என்னஎன்ன விதங்களில் ஒரு விமானம் மாயமாகும் வாய்ப்பிருக்கிறது என்ற தெரிந்த மட்டத்தில் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. ஆனால் முன் பின் தெரியாத காரணங்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.1.
திருட்டு பாஸ்போர்ட்டில் இருவர் பயணம் செய்த விவகாரம்:இது குறித்து அமெரிக்க முன்னாள் விமானப் போக்குவரத்துத் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ என்ன கூறுகிறார் என்றால், திருட்டு பாஸ்போர்ட் என்பதனால் பயங்கரவாத தொடர்புடைய நபர், விமானம் எங்காவது வெடிக்கச்செய்ய பட்டிருக்கலாம் என்று கூற முடியாது. எதிர்கால ஒரு திட்டத்திற்காக பயங்கரவாதிகள் ஒரு வெள்ளோட்டம் பார்த்திருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.2.
விமானத்தின் பாகங்கள் இதுவரை தென்படவில்லை. இதனால் பாம் வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம்:
அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் துணைத் தலைவர் ராபர்ட் பிரான்சிஸ் கூறுகையில், "இந்த மாயமான சமாச்சாரம் கேள்விப்பட்டவுடன் நான் நினைத்தது என்னவெனில் ஏதோ காரணங்களால் விமானம் வெடித்துச் சிதறியிருக்கும், இதற்கான சிக்னல் எதுவும் இல்லாமலேயே இது நடந்திருக்கலாம் என்று. ராடாரிலிருந்து விமானம் சுவடின்றி மாயமாகியுள்ளது என்றால் அது காணாமல் போவதற்கு முன்பு எதிர்பாராதது ஏதோவொன்று நடந்துள்ளது. என்றார்.