மலேசிய விமான விபத்தில் 239 பேர்பலியான பயங்கரம்! போலி பாஸ்போர்ட்டில் 2 பேர் பயணம் செய்தது அம்பலம்!
, திங்கள், 10 மார்ச் 2014 (10:57 IST)
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற விமானம் பயங்கர விபத்துக்குள்ளானது. அந்த விமானம் 9ஆம் தேதி அதிகாலை தெற்கு சீனக் கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென மாயமானது.
கட்டுப்பாட்டு அறையின் தொடர்பையும் இழ்ந்தது. இந்த நிலையில் வியநாஅம் அருகே கடலில் விழுந்து மூழ்கியது அந்த விமானம். நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சம்பவத்தில் 239 பேர் பலியாகினர்.விமானத்தையும், அதில் பயணம் செய்தவர்களையும் தேடும் பணியில் வியட்நாம் கப்பல்கள் முழு வீச்சுடன் ஈடுபட்டுள்ளன. அத்துடன் மலேசியா மற்றும் அதன் அண்டை நாடுகளின் 22 விமானங்கள், 40 கப்பல்களும் இந்தப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சீனாவும், அமெரிக்காவும் கூட மீட்பு பணிகளுக்காக கப்பல்களை அனுப்பி உள்ளன.
தேடுதல் வேட்டை பரப்பளவும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. மலேசியாவின் மேற்கு கடலோரப்பகுதி மட்டுமின்றி, விட்நாம் பகுதிகளிலும் இந்த பணி நடந்து வருகிறது. ஆனாலும் இதுவரை பலன் எதுவும் கிடைக்கவில்லை.