மலேசியாவில் மழை வெள்ளத்தினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மழை வெள்ளத்தால் ஜோஹோர் மாநிலத்தில் கடும் பாதிப்புக்கு உள்ளான நிலையில், அங்கு காரில் பயணம் செய்த இரு பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஜோஹோர் மாநிலத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான பகுதிகளில் இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெள்ள பாதிப்புக்குள்ளான மாநிலங்கள் அனைத்திலும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.