பாலித்தீவில் நடைபெற்றுவரும் இந்தோ-ஏசியான், கிழக்காசிய மாநாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று காலை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கு இடையேயான உறவு, பிரச்னைகளைத் தீர்ப்பது, அணுசக்தி ஒத்துழைப்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து பேசப்பட்டதாகத் தெரிகிறது.
அணுசக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா வலியுறுத்தினார்.
இன்று மேலும் சில நாட்டுத் தலைவர்களுடன் மன்மோகன் சிங் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.