இந்தப் புதைகுழியிலிருந்து இதுவரை 10 மண்டை ஓடுகளும், மனித உடல் எச்ச சொச்சங்களும் எடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடத்திற்கு பாதுகாப்பு அளிக்கவேண்டும் என்று நீதிபதி நேற்று உத்தரவிட்டார்.
வரும் சனிக்கிழமை மேலும் மண்டை ஓடுகள் அதில் இருக்கிறதா என்பதைப்பார்த்து அவற்றையும் எடுக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து வரும் சனியன்று காலை 7 மணிக்கு புதைகுழி தோண்டப்படுகிறது.
இதற்கிடையே இதுவரை கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடுகளை பரிசோதனை சாலைக்கு அனுப்பியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கோயிலுக்கு அருகில் நீர்க்குழாய் பொருத்தும் பணிக்காக தோண்டப்பட்டபோது 6 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.